பள்ளிக்கு பொருட்கள் வழங்கல்
காரைக்குடி: அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்பித்தலுக்காக வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. அரியக்குடி ஸ்ரீ சீனிவாச பெருமாள் டிரஸ்ட் சார்பில் கண்காணிப்பு கேமரா, ஒலிபெருக்கி சாதனங்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் மாணவர்களுக்கு கற்றலில் புதுமை சேர்க்கும் விதமாக வகுப்பறைகளுக்கு ஏழு ஸ்மார்ட் டி.வி., வழங்கப்பட்டு உள்ளது. அலர்மேல்மங்கை தாயார் டிரஸ்ட் பொரு ளாளர் சிதம்பரம், ஸ்ரீ சீனிவாச பெருமாள் டிரஸ்ட் செயலாளர் நாச்சியப்பன், பழனியப்பன் ஆகியோர்களுக்கு தலைமையாசிரியர் பிரிட்டோ மரியாதை செலுத்தினார்.