உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் சப்ளை இல்லை இந்திரா நகர் மக்கள் அவதி

குடிநீர் சப்ளை இல்லை இந்திரா நகர் மக்கள் அவதி

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி 25,26வது வார்டில் உள்ளது இந்திரா நகர் . இந்திராநகரில் ஏழு தெருக்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இன்றி மக்கள் சிரமப் படுகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 10 நாட்களுக்கும் மேல் இந்த பகுதியில் தண்ணீர் வரவில்லை. குடிநீர் பயன்பாட்டிற்கு கேன் 30 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். சிரமாக உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துவிட்டோம்.எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ