மேலும் செய்திகள்
லாரி மீது கார் மோதி 2 சகோதரர்கள் பலி
10-Nov-2024
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாயினர். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் முன் உள்ள 'திருப்பாற்கடல்' எனப்படும் குளம் மழையால் நீர் நிரம்பியுள்ளது. இதன் மேற்கு படித்துறையில் நேற்று மாலை 5:00 மணி அளவில் சைக்கிள் நீண்ட நேரமாக நின்றது. மீன் துாண்டில்கள்,சோப்பு, டவல், சிறுவர்களின் ஆடைகள் கிடந்தன. விசாரணையில் இவை திருக்கோஷ்டியூர் கண்ணாத்தாள் கோயில் தெரு ஜெயலெட்சுமி மகன்களான 7 ம் வகுப்பு படித்த விஷ்ணு 12 மற்றும் 4ம் வகுப்பு படித்த ஸ்ரீ கிருஷ்ணா 9, ஆகியோருடையது என்பது தெரிந்தது. இருவரும் கோயில் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோயில் நிர்வாகத்தினர், கிராமத்தினர், டி.எஸ்.பி. செல்வக்குமார், தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன்,தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரகாஷ் முன்னிலையில் படித்துறையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு 7:30 மணி முதல் தேடத்துவங்கினர். இரவு 8:50 மணி அளவில் சகோதரர்கள் இருவர்களின் உடல்களையும் மீட்டனர். மீன்பிடிக்க சென்ற இவர்கள் குளத்தில் மூழ்கி பலியானது தெரியவந்தது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Nov-2024