மேலும் செய்திகள்
2 பிள்ளைகளுடன் தாய் மாயம் போலீசார் விசாரணை
26-Jan-2025
சிவகங்கை; காளையார்கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில், சத்யா 36 தம்பதி. இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் கடந்த நிலையில் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். 3 பேரும் அரசு பள்ளியில் படிக்கின்றனர். செந்தில் குடி பழக்கம் உடையவர். செந்தில் மது குடிப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு செந்தில் சத்யாவிடம் 5 பவுன் தங்க நகையை தருமாறும் அதை அடகு வைத்து தொழில் செய்வதாக கூறியுள்ளார். நகையை கொடுக்க சத்யா மறுத்துள்ளார். இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சத்யா வீட்டின் முன்பு துாக்கிட்டு இறந்தார். சத்யாவின் 12 வயது மூத்த மகன் பள்ளியில் இருந்து வந்து பார்த்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யாவின் உறவினர்கள் நேற்று உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர்அன்னராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் உறவினர்கள் உடலை வாங்கி கொண்டு கலைந்து சென்றனர்.
26-Jan-2025