மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்: துாத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த பாக்ராஜ் மகன் மரியசெல்வராஜ்,37, இவரது மனைவி பத்மாமேரி,31,. இவரது மகன் சந்தோஷ் செல்வம்,7,. அதே பகுதியை சேர்ந்த் சண்முகத்தாய், 53, சரஸ்வதி,50, கணபதி,52, லதா,40, சின்ன பாண்டி,40, ராணி,40, ஞானம்மாள்,60, பாக்கியராஜ்,62,. ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி சர்ச்சில் சந்தோஷ் செல்வத்திற்கு மொட்டையடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஊரில் இருந்து டவேரா காரில் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் இன்று(20ம் தேதி) அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனேரா பகுதியில் கார் வந்துக்கொண்டு இருந்த போது, டிரைவர் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இதில், ராணி, சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து 108 ஆம்புலென்ஸ் மூலம் இறந்தவர்களின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. மேலும் காயமடைந்த 7 பேரையும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025