உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை

பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை

கம்பம்:உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படைகளை அமைக்குமாறு, கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.சட்டசபை தேர்தலில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பது பெருமளவில் தடுக்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இது குறித்த புகார்களின் பேரில், நகராட்சிக்கு ஒரு பறக்கும் படை, ஐந்து பேரூராட்சிகளுக்கு ஒரு படை என்ற அடிப்படையில், பறக்கும் படைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ