உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலை விழா போட்டியில் போடி ஏல விவசாயிகள் கல்லுாரி முதலிடம்

கலை விழா போட்டியில் போடி ஏல விவசாயிகள் கல்லுாரி முதலிடம்

ஆண்டிபட்டி, : கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த கலைவிழாவில் போடி ஏலவிவசாயிகள் சங்க கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா நடந்தது.விழாவில் கல்லூரி குழுமத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா, சுதா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்றார். மாணவ மாணவிகளின் குழு நடனம், பாட்டுப்போட்டி, ஊமை நாடகம், தொழில் திறன், வினாடி வினா, கழிவிலிருந்து கலை பொருட்கள் செய்தல், புகைப்படம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 27 கல்லூரிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி குழுமத்தலைவர் மோகன் பரிசுகள் வழங்கினார். போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி மாணவர்கள் முதல் பரிசும், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவிகள் 2ம் பரிசும் பெற்றனர். ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் வேல்ராஜன், கம்ப்யூட்டர் பயன்பாடு துறை தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி