கல்லுாரி மாணவி மாயம்
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலூத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவரது மூத்த மகள் அபிநயா 19, தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆகஸ்ட் 28 ல் கல்லூரிக்கு செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை. மலைச்சாமி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் தேடி வருகின்றனர்.