உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் அடிப்படை வசதிகள் செய்ய வனத்துறை நடவடிக்கை தேவை

சுருளி அருவியில் அடிப்படை வசதிகள் செய்ய வனத்துறை நடவடிக்கை தேவை

கம்பம் : சுருளி அருவியில் அடிப்படை வசதி செய்து தர வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தென் மாவட்டங்களில் சுற்றுலா தலங்களின் வரிசையில் பிரதான இடம் பிடிப்பது சுருளி அருவியாகும். அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக விழும் அருவி தண்ணீரில் மூலிகை கலந்திருப்பதாகவும், நோய்களை தீர்க்கும் என்ற ஐதீகம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகின்றனர்.இத் தலம் ராமேஸ்வரத்திற்கு இணையான ஆன்மிக தலமாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி தை' மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்கின்றனர்.எனவே கோடை காலத்தில் கூட இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.ஆனால் இங்கு வருபவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது.பயணிகள் உட்காருவதற்கு பெஞ்ச், தேவையான எண்ணிக்கையில் கழிப்பறைகள், ஒட்டல்கள், தங்கும் விடுதிகள், குடிநீர், கார் பார்க்கிங், பூங்கா, பொழுது போக்கு அம்சங்கள், உடை மாற்றும் அறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை.நுழைவு கட்டணம் என்ற பெயரில் சுருளிப்பட்டி ஊராட்சியும், வனத்துறையும் சுற்றுலா பயணிகளிடம் வசூல் மட்டும் செய்கின்றன. ஆனால் அருவிக்கு குறைந்தது ஒரு கி.மீ. தூரம் குண்டும் குழியுமான ரோட்டில் நடந்து செல்ல வேண்டும். எனவே சுருளி அருவியில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், அருவிக்கு செல்லும் ரோட்டை பராமரிக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ