உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சிகளில் மூலிகை நர்சரி அரசின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்

ஊராட்சிகளில் மூலிகை நர்சரி அரசின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்

கம்பம் : அனைத்து ஊராட்சிகளிலும் நர்சரி அமைத்து அதில் மரக்கன்றுகள், மூலிகை செடிகள் வளர்க்க வேண்டும் என்ற அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை வளர்க்க நர்சரி அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. பெரும்பாலான ஊராட்சிகளில் இடம் இல்லை என்று கூறி நர்சரி அமைப்பதை தவிர்த்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஊராட்சிகளில் நர்சரிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக நர்சரி ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகள் மட்டுமின்றி மூலிகை செடிகளும் வளர்க்க வேண்டும். அதை பொதுமக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ வீடுகளில் மூலிகை செடிகள் வழங்கி, வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.மூலிகைகளின் பயன்பாடுகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் தரலாம். நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களை நர்சரி பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். கிடைக்கும் இடங்களில் ஊராட்சிகளே மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.ஆனால் ஊராட்சிகளில் நர்சரி அமைப்பது, மூலிகை செடிகள் வளர்ப்பதை ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும நர்சரி அமைக்கவும், மூலிகை செடிகள் வளர்த்து பொதுமக்களுக்கு வழங்ககும் அரசின் உத்தரவை செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை