சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தாய், மகன் மீது போக்சோ வழக்கு
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மகன், ஆதரவாக இருந்த தாய் உட்பட இருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெபி 22, பாலியல் பலாத்காரம் செய்தார். ஜெபி, அவரது தாய் தனபாக்கியம் 40. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சிறுமியின் தாயாரை அவதுாறாக பேசி கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். அனைத்து மகளிர் போலீசார் மகன், தாய் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.