உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி அருகே சகோதரர்களுக்குள் அடிதடி தகராறு: மூவர் மீது வழக்கு

போடி அருகே சகோதரர்களுக்குள் அடிதடி தகராறு: மூவர் மீது வழக்கு

போடி : போடி முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்தவர் கோட்டைமலை 55. இவர் காளியம்மன் கோயில் அருகே மாட்டு கொட்டம் வைத்து உள்ளார். இவரது மாடு இவரது தம்பி பாலு 46. என்பவரின் மாட்டு கொட்டத்திற்குள் புகுந்து அங்கு இருந்த தீவனத்தை தின்றது. இதனை பாலு கண்டித்து கோட்டைமலையை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.ஆத்திரம் அடைந்த கோட்டைமலை இவரது மகன் அருண் இருவரும் சேர்ந்து பாலுவை பேட்டரி லைட்டால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் உள்ளனர். இரு தரப்பு புகாரில் போலீசார் பாலு, கோட்டைமலை, அருண் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை