இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம்
கூடலுார் : கூடலுாரில் தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் இன்றும் (ஏப். 23) நாளையும் நடைபெறுகிறது.தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தனது அறிக்கையில் கூறுகையில்,' கூடலுார் இந்து நடுநிலைப் பள்ளியில் ஏப். 23, 24 ( இன்று, நாளை)ஆகிய இரண்டு நாட்கள் தபால் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் காலை 9:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி திருத்தம், அலைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு, குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு ஆகியவை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.