உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணம் தராததால் விரலை கடித்தவர் மீது வழக்கு

பணம் தராததால் விரலை கடித்தவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : மகன் வாங்கிய பணத்தை கேட்டு தகராறு செய்து, தந்தையின் கைவிரலை கடித்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதி நகரைச் சேர்ந்த ரீகன்ராஜ் மனைவி பிரியங்கா 25. இவரது தம்பி பாண்டியராஜன் 23. ஓராண்டுக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷிடம் 30, ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பிச் செலுத்திய நிலையில், ரூ. 5 ஆயிரம் மட்டும் கட்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் விபத்தில் காயமடைந்த பாண்டியராஜன், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பணம் கேட்டு வந்த பிரகாஷ், வீட்டிலிருந்த பிரியங்காவை அவதுாறாக பேசினார். வீட்டிற்கு வந்த பிரியங்காவின் அப்பா முருகனிடம் 55, தகராறு செய்து கை விரலை கடித்துள்ளார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு முருகன் அனுப்பி வைக்கப்பட்டார். பிரியங்கா புகாரில் தேவதானப்பட்டி போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ