உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தேனி : அல்லிநகரம் கக்கன்ஜி காலனி அழகுராஜா 30. கிரில் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ரம்யா. இவர்களது 11 மாத குழந்தை யஷ்வந்தன். நேற்று மாலை வீட்டில் தண்ணீர் தொட்டியில் யஷ்வந்தன், தவறி விழுந்தான். பெற்றோர், அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். அழகுராஜா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !