தேனியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்
தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தெருவிளக்குகள் பகலிலும் எரிந்தன. மின் சிக்கனம் கடைபிடிக்க வேண்டிய காலகட்டத்தில் தெருவிளக்குகள் பகலிலும் எரிந்து மின்சாரம் வீணாவதையும் தடுக்க வேண்டும். நகர்பகுதியில் பல இடங்களில் இதே நிலை நீடிக்கிறது. நகராட்சி பொறியியல் பிரிவினர் தெருவிளக்குகளை பகலில் எரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.