உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு

குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு

கம்பம் : தேனி மாவட்டத்தில் டீன் ஏஜ் திருமணம், குழந்தை பிறப்பு சதவீதம் அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வர, திருமண வயது 21 என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள குடும்ப நலத்துறை திட்டமிட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் 3 குழந்தைள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற பெண்கள் 200 க்கும் மேல் உள்ளனர். இது மாநிலத்தில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது முதலிடம் பெறுவதாக கூறுகின்றனர். மாவட்டத்தில் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் 20 வயதுக்கு கீழ் உள்ள 200 பேர்களுக்கு மேல் திருமணம் செய்துள்ளனர். இதில் 30 பேர்களுக்கு கருச்சிதைவு ஆகி உள்ளது . அது தானாக நடந்ததா அல்லது அவர்களாக கருக்கலைப்பு செய்தனரா என்பது தெரியவில்லை.எனவே திருமண வயது 21 என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்த குடும்பநலத்துறை முடிவு செய்துள்ளது.தன்னார்வலர்கள், பொது நல அமைப்புக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவ மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் உள்ளிட்டோரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குடும்ப நலத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை