உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

ஆண்டிபட்டி : முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதத்தால் உதவி பெறும் முதியோர்கள் பாதிப்படைகின்றனர். 60 வயதை கடந்த ஆதரவற்ற முதியோர், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.1200, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை அந்தந்த மாத துவக்கத்தில் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும். இம்மாதம் 10 நாட்களாகியும் இவர்களுக்கான உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை. உதவித்தொகையை எதிர்பார்த்துள்ள முதியோர்கள் தாமதத்தால் கவலையில் உள்ளனர். அரசு மூலம் நிதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம், இருவாரங்களாக தொடர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டத்தால் முதியோர்களுக்கு பணம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் முதியோர்களுக்கான பணம் கிடைத்துவிடும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ