உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலை புலிகள் காப்பக பகுதியில் ட்ரோன் வழங்க வலியுறுத்தல்

மேகமலை புலிகள் காப்பக பகுதியில் ட்ரோன் வழங்க வலியுறுத்தல்

கம்பம்: மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வனக் குற்றங்களை தடுக்கவும் வன உயிரின நடமாட்டங்களை கண்காணிக்கவும் வனப் பணியாளர்களுக்கு 'ட்ரோன்' வழங்க புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வன உயிரின வேட்டையை தடுத்தல், குற்றவாளிகளை அடையாளம் காணுதல், வனப்பரப்பை மதிப்பீடு செய்தல், புதிய நோய்கள் பரவுவதை கண்டு பிடித்தல், தாவரங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பனவற்றை தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிற பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் ட்ரோன் பயிற்சி வனத்துறையினருக்கு தேனி மாவட்டத்தில் வழங்கப்பட்டது. கம்பம் கிழக்கு சரகத்திற்குப்பட்ட வனப்பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்பர்கள், வனப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சி வழங்கி இரண்டு ஆண்டுகளை கடந்தும் ட்ரோன் வழங்கவில்லை. ஒட்டுமொத்த வனப்பரப்பை கண்காணிக்க ட்ரோன் அவசியமாகிறது. எனவே வளத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் புலிகள் காப்பக பகுதிகளுக்கு மட்டுமாவது 'ட்ரோன்' வழங்க வேண்டும். இதன் மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை எளிதாக மேற்கொள்ள முடியும். புலிகள் காப்பக பகுதியில் வனக் குற்றங்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி