ஆர்ப்பாட்டம்
தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், உதவியாளர் சங்கத்தின் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களை அவதுாறாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாட்ட தலைவர் ஏ.சுமதி தலைமை வகித்தார். மாநில தலைவர் தேன்மொழி, செயலாளர் ராதிகா, மாவட்ட செயலாளர் பி.சுமதி, மாவட்ட நிர்வாகிகள், ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து கலெக்டர் வைத்திநாதனிடம் மனு அளித்தனர்.