முதியவர் ஆற்றில் சடலமாக மீட்பு
கூடலுார்: கூடலுார் எருமைக்கார சாவடி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 80. கடந்த இரண்டு நாட்களாக இவரை காணவில்லை என மகன் ராஜன் கூடலுார் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வந்த நிலையில் லோயர்கேம்ப் அருகே முல்லைப் பெரியாற்றில் இறந்த நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.