ஆடு திருட வந்தவர்கள் தாக்கி உரிமையாளர் காயம்
பெரியகுளம், : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் 61.தனது நிலத்தில் 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். அதற்கு காவலாக இரவில் தூங்கிக்கொண்டிருந்தார். மர்ம நபர்கள் ஆட்டினை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆடுகள் சத்தம் கேட்டு பரமசிவம் பிடிக்க முயன்றார். ஆட்டினை விட்ட திருடர்கள் கட்டையால் பரமசிவத்தை அடித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். தென்கரை எஸ்.ஐ., திருடர்களை தேடி வருகிறார்.-