உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் - கார் விபத்தில் கணவன், மனைவி காயம்

டூவீலர் - கார் விபத்தில் கணவன், மனைவி காயம்

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி கம்பெனி தெரு நாகமுத்து 31. சலூன் கடை உரிமையாளர். டூவீலரில் நாகமுத்து, மனைவி பவித்ராவுடன் 28, பெரியகுளத்தில் உள்ள வங்கிக்கு சென்றனர். பின் கெங்குவார்பட்டி திரும்பிக் கொண்டிருந்தனர். பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு, காட்ரோடு அருகே பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவன், மனைவி இருவரும் காயம் அடைந்தனர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய அதேப்பகுதி கோட்டையன் கோயில் தெரு கார் டிரைவர் மனோஜ்குமாரிடம் 32, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை