கணவர் மாயம்: மனைவி புகார்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொட்டோடைபட்டியை சேர்ந்தவர் குமார் 41, இவரது மனைவி அருணா தேவி 26, இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு முன் தோட்டத்திற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிச் சென்ற குமார் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அருணாதேவி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.