| ADDED : டிச 29, 2025 06:28 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் இந்தாண்டு அக்., 27ல் 70.24 அடி வரை உயர்ந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. மழையால் அணைக்கு வந்த நீர், இருப்பில் இருந்த நீர் சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம், குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதால் அணை நீர் தற்போது 54.99 அடியாக குறைந்து உள்ளது. டிச.25ல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நிறுத்தப்பட்ட நீர், டிச. 27ல் வினாடிக்கு 1050 கன அடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டது. கால்வாய் வழியாக பாசனத்திற்கு வெளியேறும் நீரின் அளவு நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1250 கன அடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 545 கன அடி ஆகும். குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.