விரிவாக்கம் செய்த ரோடு பணிகள் ஆய்வு
தேனி: மாநில நெடுஞ்சாலைத்துறை தேனி உட்கோட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் வீரபாண்டியில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் ரோடு விரிவாக்கம், பூதிப்புரம் ரோடு மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. இந்த பணிகளை மதுரை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார். ஆய்வில் சாலையின் தரம், நீளம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். கோட்டப்பொறியாளர் சுவாமிநாதன், உட்கோட்டப் பொறியாளர் ராமமூர்த்தி, உதவி, இளநிலைப்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.