குன்னுார் ஆற்றில் ஆண் சடலம்
ஆண்டிபட்டி: குன்னூர் தபால் ஆபீஸ் அருகே வைகை ஆற்றின் கிழக்குப் பக்கம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இறந்தவர் சட்டை அணியவில்லை, யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவில்லை. இது குறித்து குன்னூர் வி.ஏ.ஓ., சசிகுமார் புகாரில் க.விலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.