மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்: 5 பேர் மீது போக்சோ
22-Apr-2025
பெரியகுளம்; பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராஜகுரு 25.என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். தகவல் அறிந்த பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் வாசுகி விசாரணை நடத்தினார். அவரது புகாரில் சிறுமியை திருமணம் செய்த ராஜகுரு, உடந்தையாக இருந்த அவரது தந்தை ராஜா, தாய் தனம், சிறுமியின் தந்தை குமார், தாய் மகேஸ்வரி ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் பெரியகுளம் அனைத்துமகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Apr-2025