கள்ளத்தொடர்பு தகராறில் கொலை செய்தவர் கைது
போடி ' கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறில் 45 வயது நபரை கத்தியால் குத்திக் கொலை செய்த பாலமுருகனை 33, போடி நகர் போலீசார் கைது செய்தனர்.போடி கருப்பசாமி கோயில் தெரு ஆண்டிவேல் 45. இவரது மனைவி இறந்துவிட்டார். ஆண்டிவேலுக்கும், கரட்டுப்பட்டியில் வசிக்கும் பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆண்டிவேல் போக்சோ வழக்கில் 2 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கும் போடி குலாலர் பாளையம் சுல்லக்கரை தெரு பாலமுருகனுக்கும் 33 தொடர்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் தண்டனை முடிந்து வந்த ஆண்டிவேல் தனது கள்ளக்காதலியுடன் பாலமுருகன் தொடர்பில் இருப்பதை அறிந்தார். ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கத்தியால் ஆண்டிவேலை குத்திக் கொலை செய்தார். வி.ஏ.ஓ., ஆனந்தகுமார் புகாரில் போடி டவுன் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.