எம்.எல்.ஏ., நிதியில் புதிய கட்டடங்கள் திறப்பு
கூடலுார் : கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர், நுழைவுவாயில், லோயர்கேம்ப் அரசு உயர்நிலைப் பள்ளி சுற்றுச் சுவர், நுழைவு வாயில், லோயர் கேம்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, கன்னிகாளிபுரத்தில் அங்கன்வாடி மையம், புதிய வாரச்சந்தையில் நுழைவு வாயில்கள் உட்பட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.தலைவர் பத்மாவதி, கவுன்சிலர் லோகந்துரை, எம்.எல்.ஏ., மகாராஜன் திறந்து வைத்தார். கமிஷனர் கோபிநாத், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.