கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த அலுவலர்கள்
தேனி: நெடுஞ்சாலை, ஊரகப்பணித்துறை பொறியியல் சங்கம் சார்பில் மாநில நெடுஞ்சாலைத்துறையில் பதவி உயர்வில் விதிமுறைகளை பின்பற்றாதது, நீதிமன்ற உத்தரவினை பின்றாதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவதாக அறிவித்து இருந்தனர். இதன்படி நேற்று தேனி மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலத்தில் உதவிப்பொறியாளர் உதயகுமார் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள மாநிலநெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.