மேலும் செய்திகள்
கங்காதரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
29-Nov-2024
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது.ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் 2011 ல் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை, பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு, உபயதாரர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜை எம்.எல்.ஏ., மகாராஜன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன், பழனி பாதையாத்திரை பக்தர்கள் குழு சார்பில் தண்டபாணி, வஜ்ரவேல், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் உபயதாரர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து அறநிலையத் துறையினர் கூறியதாவது: கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமான பாலாலய பூஜைகளுக்கு பின் ராஜகோபுரம் உட்பட 3 கோபுரங்கள், கொடிமரம், கோயில் கருவறை, பரிவார தெய்வங்கள் உள்ள இடங்கள் ஆகியவற்றை புனரமைக்க ஹிந்து அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.கொடிமரம் மற்றும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூச திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் முன்புறம் சிதிலமடைந்து ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டு புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப் பணிகளையும் விரைந்து முடித்தபின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றனர்.
29-Nov-2024