மேலும் செய்திகள்
அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம்
26-Nov-2025
தேனி: தேனி தலைமை தபால் நிலையம் வளாகத்தில் அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை இணைக்க வேண்டும். அகில இந்திய பொதுச் செயலாளர் மகாதேவய்யா சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், சேமிப்பு கணக்கு, வைப்பு தொகை கணக்கு துவக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கோட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் கனவாமைதீன், உதவித் தலைவர் தெய்வராஜ் முன்னிலை வகித்தனர். தேனி கோட்டத்தில் உள்ள 360 கிராமப்புற அஞ்சல் ஊழியர்களில் 172 பேர் பங்கேற்றனர்.
26-Nov-2025