உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப்பெரியாறு அணையில் கண்ணாமூச்சி காட்டும் மழை

முல்லைப்பெரியாறு அணையில் கண்ணாமூச்சி காட்டும் மழை

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் மட்டும் கோடை மழை பெய்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது.முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 113.40 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 220 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு 311 கன அடி திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1459 மில்லியன் கன அடியாகும்.

கண்ணாமூச்சி காட்டும் மழை:

நீர்ப்பிடிப்பில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் மட்டும் கோடை மழை பெய்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று பெரியாறில் 10.2 மி.மீ., மழை பதிவானது. மார்ச் 12ல் 11.80 மி.மீ., மார்ச் 13ல் 8 மி.மீ.. மழை பெய்தது. மற்ற நாட்களில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவியது. தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும். ஆனால் கோடை மழை கண்ணாமூச்சி காட்டி வருவதால் நீர்மட்டம் உயருவதில் சிக்கல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி