விதி மீறிய கட்டடம் அகற்றம்
மூணாறு: மூணாறில் எம்.ஜி., காலனியில் விதிமுறைகள் மீறி கட்டிய கட்டடத்தை நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வருவாய்துறை அதிகாரிகள் அகற்றினர்.அப்பகுதியில் அரசு ஹோமியோ மருத்துவமனை அருகே பால், கட்டடம் கட்டி வந்தார். அப்பணிகள் விதிமுறைகள் மீறி நடப்பதாக கூறி ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் சிறப்பு தாசில்தார் ஹரிகுமார் தலைமையில் வருவாய்துறை ஊழியர்கள், நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் கட்டடத்தை அகற்றினர்.