ரேஷன் கடைகளில் தராசுகள் பறிமுதல்
தேனி: உத்தமபாளையம் தாலுகாவில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அனுமந்தன்பட்டி, புதுபட்டி ரேஷன்கடைகளில் நடந்த ஆய்வில் தராசுகள் உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தியதால் இரு கடைகளில் இருந்தும் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.