உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தம்

 பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தம்

கம்பம்: கம்பத்தில் பத்திரப் பதிவு செய்வதை தவிர்த்து பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கம்பம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதில் தேவையற்ற இடையூறுகள் செய்தும், அலைக்கழிப்பு செய்வதாக கம்பம் சார்பதிவாளர் மீது புகார் கூறி, பத்திர எழுத்தர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று கம்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு பணிகள் நடக்க வில்லை. மேலும் சார்பதிவாளர் மீது புகார் கூறி பத்திர எழுத்தர்கள் மாவட்ட பதிவாளரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்