உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் புதிய பூங்கா அமைக்க ஆய்வு

வைகை அணையில் புதிய பூங்கா அமைக்க ஆய்வு

தேனி:வைகை அணையில் புதிய பூங்கா அமைப்பதற்காக ஆய்வு துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் வைகை அணை உட்பட 6 அணைகளில் தலா ரூ. 2 கோடி மதிப்பில் பூங்காக்கள் அல்லது பொழுது போக்கு தலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா அல்லது பொழுது போக்கு தலங்கள் அமைப்பதற்காக வைகை அணை பகுதியை சுற்றி உள்ள சில இடங்களை ஒரு சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளனர். விரைவில் ஆய்வுகள் துவங்க உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி