மேலும் செய்திகள்
நொய்யல் ஆற்றின் கரைகளில் பனை விதை நடவு துவக்கம்
01-Oct-2024
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் பனைவிதைகள் சேகரிப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக அளவு பனைவிதைகள் நடவு செய்து வளர்க்க வேண்டும். அதிக விதை சேகரித்து தருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அரசு, தனியார் நிலங்கள், கல்வி வளாகங்களில் பனை நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிற மாவட்டங்களில் பனை விதைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பனை நடவு நிகழ்ச்சிகள் வேளாண், தோட்டக்கலை, வனத்துறை, பள்ளிகல்வித்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்டவற்றை இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப், மேகமலைபுலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், வன அலுவலர் சமர்த்தா பங்கேற்றனர்.
01-Oct-2024