உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர்கள் தேர்வு

தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர்கள் தேர்வு

தேனி : தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பென்டத்லான் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நேற்று, நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தேனியை சேர்ந்த மாணவர் சினேகன் 'ட்ரயத்தல்' (Triathle) பிரிவில் 3ம் இடமும், 15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர் ரெனிஷ்கர் 'டெட்ராத்லான்' (Tetrathlon) இரண்டாம் இடமும் வென்றனர். இவர்கள் பீகாரில் நடக்க உள்ள தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கின்றனர். மாடர்ன் பென்டத்தலான் அசோசியேசன் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை