மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி
மூணாறு: மாட்டுபட்டி அணையில் படகு சவாரி முடிந்து திரும்பிய சுற்றுலா பயணி மயங்கி விழுந்து இறந்தார்.கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர் சபரிதாஸ் 66. இவர் குடும்பத்தினருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். மாட்டுபட்டி அணையில் நேற்று முன்தினம் மாலை அனைவரும் படகு சவாரி முடித்து விட்டு படகு குழாம் பகுதியில் ஏற்றத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சபரிதாஸ் மயங்கி விழுந்தார். அவரை உடனிருந்தவர்கள் மூணாறு டாடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரிதாஸின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.