உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது லாரி மோதி விபத்து: கை துண்டிப்பு

டூவீலர் மீது லாரி மோதி விபத்து: கை துண்டிப்பு

தேவதானப்பட்டி: ஆண்டிபட்டி தாலுகா, பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 34. ராஜஸ்தானில் தோசை கடை நடத்தி வந்தார். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்தார். டி.காமக்காபட்டியில் உறவினர் பாலமுருகனை பார்த்துவிட்டு, டூவீலரில் தேவதானப்பட்டி -வைகை அணை ரோடு டி.வாடிப்பட்டி வளைவில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் செல்வராஜ் வலது கை துண்டானது. கோவை தனியார் மருத்துவமனைக்கு செல்வராஜ் கொண்டு செல்லப்பட்டார். திருச்சி மாவட்டம், மீனாட்சியூர் கல்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பொன்னையாவிடம் 32. தேவதானப்பட்டி எஸ்.ஐ., விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ