உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுப்பிரமணியர் கோயிலில் விமான பாலாலய பூஜை

சுப்பிரமணியர் கோயிலில் விமான பாலாலய பூஜை

போடி. நவ. 4- -: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று விமான பாலாலய பூஜை நடந்தது. போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோயில் அமைந்து உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை முன்னிட்டு கோயில் புனரமைப்பு பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காவ பணிகள் துவங்க உள்ளன. நேற்று கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் கோயில் விமான பாலாலய பூஜைகள் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபி ஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இக்கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதால் நேற்று யாகசாலை பூஜைகளுடன் விமான பாலாலய பூஜை நடந்தது. இதனை ஒட்டி கோயில் ராஜ கோபுரம், சிலை களுக்கு வர்ணம் பூசுதல், பெயிண்டிங் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை