உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் ஒரு நாள் நிறுத்தம்

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் ஒரு நாள் நிறுத்தம்

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று ஒரு நாள் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக நவ., 10 முதல் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள நிலங்களுக்கு அணையில் இருந்து 9 நாட்களில் 1830மில்லியன் கனஅடியும், பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்குநவ., 29 முடிய 10நாட்களில் 418 மில்லியன் கனஅடியும் திறந்து விடப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு அணையில் நீர் நிறுத்தப்பட்டது. பூர்வீக பாசனப்பகுதி 2ல் உள்ள நிலங்களுக்கு இன்று முதல் டிச., 8 வரை 752 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று அணை நீர்மட்டம் 56.56 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 568 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை