புகையிலை பதுக்கிய பெண் கைது
போடி: போடி கீழத்தெரு செல்வராணி 63. இவர் தனது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் செல்வராணியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.