உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடன் பிரச்னையால் பெண் தற்கொலை

கடன் பிரச்னையால் பெண் தற்கொலை

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு உப்போடை தெருவை சேர்ந்தவர் முத்து விருமாண்டி 50, முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது தேனியில் தனியார் மில்லில் செக்யூரிட்டி பணி செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி 28, இவர்களது மகள் திருமணத்திற்காக கணவர் அதிக கடன் வாங்கி இருந்தார்.இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.அவ்வப்போது இதனை முத்துவிருமாண்டி சமாதானம் செய்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மனம் உடைந்த தமிழ்ச்செல்வி விஷம் குடித்தார். கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை