உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூன்றாவது கணவருடன் வாழ்ந்த பெண் தற்கொலை

மூன்றாவது கணவருடன் வாழ்ந்த பெண் தற்கொலை

கம்பம் : ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் அழகர்சாமி மகள் பாண்டியம்மாள் 26. இவர்இதே ஊரை சேர்ந்த சதீஷ் உடன் திருமணம் செய்து ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாண்டியம்மாள் பிரிந்தார். பின் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சுருளியாண்டவரை 2வது திருமணம் செய்தார். இந்நிலையில் பாண்டியம்மாள் ஏலத்தோட்ட வேலைக்கு கேரளாவிற்கு ஜீப்பில் தினமும் செல்லும் போது கம்பம் நந்தகோபாலன் கோயில் தெருவை சேர்ந்த ஜீப் டிரைவர் பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் ஓராண்டிற்கும் மேலாக குடும்பம் நடத்தினார். பிரகாஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் பாண்டியம்மாள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ