மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே தங்கம்மாளபுரத்தை சேர்ந்தவர் பதினெட்டாம்படி 44, இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். ஏப்ரல் 3ம் தேதி வழக்கம்போல் மனைவியுடன் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற பதினெட்டாம்படி இலவம் காய்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். மரக்கிளை முறிந்ததில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மனைவி இந்திரா புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.