உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக செயல்படும் ஜாதி கூலிப்படையினர்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக செயல்படும் ஜாதி கூலிப்படையினர்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

திருநெல்வேலி : ''ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக நடந்த தாக்குதல் பின்னணியில் உள்ள ஜாதி கூலிப்படையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.திருநெல்வேலி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நடந்த மதன்குமார், உதய தாட்சாயிணியின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். 7 பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் எப்போதும் ஆதரவளிக்கும். இத்தகைய தம்பதிகளுக்கு அரசு பாதுகாப்பு, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இத்தகைய சம்பவங்களில் கொலைகள் கூட நடந்துள்ளன. இத்தகைய திருமணங்களுக்கு பெற்றோர் அனுமதித்தால் கூட ஊதிப்பெரிதாக்குவது சில ஜாதிய சங்கங்கள் தான். இத்தகைய ஜாதி அமைப்புகள் மீதும் சமூக விரோத சக்திகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் செயல்படும் ஜாதி கூலிப்படையினர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படை யார் என்பது போலீஸ் துறைக்கு தெரியும். கூலிப்படைகளின் அனுதாபத்தில் தான் நாம் உயிர் வாழ்கிறோம் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்வோர் பாதுகாக்கப்பட வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. இது தொடர்பாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பேசுவர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அரசு பாதுகாக்க வேண்டும். அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுடன் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gokul Krishnan
ஜூன் 22, 2024 22:46

உன் அறிவுரையை அமைச்சர் சேகர் பாபுவிடம் போய் முதலில் சொல்


A P
ஜூன் 18, 2024 17:10

எல்லா சாதியும் ஒன்றே ஆகிவிடாது. ஒருவன் இலை, தழை, காய், கனி, அரிசி, பருப்புகளைத் தின்று அமைதியாக அதே சமயம் மற்றவர்களுடன் பகை கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வரும் கோடிக்கணக்கான பணத்துக்காக தனதே ஆன தாய் நாட்டை அதன் நல்ல கலாச்சாரத்தை அழிக்கிற கெட்ட வேலையைச் செய்கிறார்கள். அடுத்ததாக மதம் மறுப்புத் திருமணம் என்று கிளப்பி விட்டு அதோ அவன்களினால் சீரழிய போகிறார்கள். சுய மரியாதை மற்றும் பகுத்தறிவு அற்ற கும்பல்கள்தான் இதையெல்லாம் ஆதரிக்கின்றன . நிலையானதான நாகரிகம், கட்டுப்பாடு, கண்ணியம் இவைகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நிலையற்ற காசுக்காக அலைகின்றனர். ஜாதி இருப்பதினால்தான் தனது ஜாதிக்கான சலுகைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், பகல் வேஷம் கட்டிக்கொண்டு பிதற்றுகிறார்கள். " தான் எந்த ஜாதியாக இருந்தால் என்ன, வாழ்ந்து காட்டுவேன் என்று " வீரத்துடன் செயலாற்றாமல் , கோழையாக இருக்கின்றனரே என்று வருந்த வேண்டியிருக்கிறது.


subramanian
ஜூன் 18, 2024 16:19

கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள்தான் இப்போது கூலி படையினர் ஆக செயல் படுகின்றனர். அந்த பத்து பதினைந்து மறந்து விட்டனர் போலும். பெற்ற தாய் தந்தைக்கு இல்லாத உரிமையும் அக்கறையும் யாருக்கும் வந்துவிடாது. இதுபோல் செய்யும் பிள்ளைகள் இதன் பிறகு தாய் தந்தை உடமையிலோ , சொத்திலோ எந்த உரிமையும் கோரக்கூடாது . அதுமட்டுமல்ல இதுவரை பிள்ளைகளை வளர்க்க அவர்கள் செலவழித்த அனைத்து தொகையும் பிள்ளைகள் வட்டியோடு திரும்ப ஒப்படைக்க வேண்டும்.


s chandrasekar
ஜூன் 18, 2024 14:59

உங்க வேலையை parungaa.


Sridhar
ஜூன் 18, 2024 12:28

இந்த காலாவதியான கம்யூனிஸ்ட் டப்பாக்களை எங்கே கொண்டு வீசலாம்?


Rajarajan
ஜூன் 18, 2024 10:48

உங்கள் குடும்பம், உங்கள் சொந்தம், உங்கள் கட்சி, உங்கள் கூட்டணி கட்சி இப்படி உள்ளவர்களின் குடும்பங்களில் நடத்திவிட்டு, நூறு சதவிகிதம் நிறைவேற்றிவிட்டு, பின்னர் அடுத்தவருக்கு உபதேசிக்கவும். உங்களை நம்பி தோழர்கள் தேர்ந்தெடுத்தது, இப்படி கல்யாண ப்ரோக்கர் வேலை செய்யவா ?? எப்படி இருந்த நீங்க, கடைசியில் இப்படி ஆகிட்டிங்க. உங்க இந்த சேட்டையை, கோபாலபுரம் குடும்பம் பக்கம் காட்டுங்க பாப்போம்.


A Venkatachalam
ஜூன் 18, 2024 09:52

உங்க பிள்ளைகள் அடுத்து உங்க கட்சி காரங்க பிள்ளைகள் செய்துவிட்டு அடுத்தவங்க பிள்ளைகளுக்கு செய்யும்போது அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு செய்தால் கலவரம் இல்லாமல் இருக்கும். சாதியை கீழ் மட்டத்தில் யாராலும் ஒழிக்க முடியாது. பணம் இருந்தால் சாதி இல்லை.


Murugesan
ஜூன் 18, 2024 09:35

சாதி மறுப்பு திருமணத்தை உங்க அக்கா தங்கையிடம் செய்யுங்கள், அடுத்த வீட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க உங்களுக்கு அருகதையில்லை


Shekar
ஜூன் 18, 2024 09:24

இவரு அண்ணன் செயல் பாபுவை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே


Jysenn
ஜூன் 18, 2024 08:29

CPIM.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி