உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பட்டியலின வாலிபர் கொலை 4 பேர் கைது

பட்டியலின வாலிபர் கொலை 4 பேர் கைது

திருநெல்வேலி:முன் விரோதத்தில் பட்டியலின வாலிபர் மீது காரை மோதி கொலை செய்து, விபத்து போல் காட்டி தப்பித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்தவர் பிரபுதாஸ், 27. பட்டியலின வாலிபர். கடந்த, 7ம் தேதி அவர் தமிழரசன் என்பவருடன் டூ - வீலரில் சென்றபோது கார் மோதி சாலையோரம் கிடந்தார். கழுத்தில் கத்தி போன்ற ஆயுதத்தால் அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை விபத்து என தவிர்க்க பார்த்தனர். இது குறித்து விசாரித்த கூடங்குளம் போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வினோத், 42, லிங்கசாமி, 23, மகராஜன், 22, அருண்குமார், 21, ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் சிக்கவில்லை. இருப்பினும், பிரபுதாசின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை